மிஷ்கினின் சவரக்கத்தியில் நடிக்க மறுத்த ஆறு நாயகிகள்
மிஷ்கின் கதை எழுதி தயாரிக்கும், சவரக்கத்தியில் நடிக்க ஆறு நாயகிகள் மறுத்ததாக நடிகை பூர்ணா தெரிவித்துள்ளார்.
மிஷ்கினின் லோன்வூல்ஃப் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகும் படம், சவரக்கத்தி. மிஷ்கினின் தம்பி ஜி.ஆர்.ஆதித்யா படத்தை இயக்க, இயக்குனர் ராம் நாயகனாக நடிக்கிறார். நாயகி பூர்ணா, வில்லன் மிஷ்கின்.
சவரக்கத்தில் எனக்கு மிகச்சிறந்த வேடம். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆறு பேர் மறுத்திருக்கிறார்கள். அந்த ஆறு பேருக்கும் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் என பூர்ணா கூறியுள்ளார்.
சவரக்கத்தியில் பூர்ணா சென்னை தமிழ் பேசி நடிக்கிறார். அவருக்கு அதற்கான பயிற்சி தரப்பட்டு வருகிறது.