வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By ஜே.பி.ஆர்.
Last Updated : திங்கள், 7 செப்டம்பர் 2015 (19:52 IST)

சினி பாப்கார்ன் - ஒய் திஸ் கொலவெறி... குடிவெறி...

மம்முட்டி சார்... ஒய் திஸ் கொலவெறி...?
 
64 வயதாகிறது மம்முட்டிக்கு. மகன் துல்கர் சல்மான் தொடர்ச்சியாக நடித்துக் கொண்டிருக்கிறார். என்ன மாதிரியான ஆர்வம் தெரியவில்லை. சுமார் படங்களாக நடித்து தள்ளுகிறார், மலையாளத்தின் மெகா ஸ்டார்.
 

 
இந்த வருடம் இதுவரை மம்முட்டி நடிப்பில் நான்குப் படங்கள் வெளிவந்துள்ளன என்றhல் பார்த்துக் கொள்ளவும். 
 
2015 -இல் முதலில் ஃபயர்மேன் வந்தது. படம் சுமார் வெற்றி. அடுத்து சித்திக் இயக்கத்தில், பாஸ்கர் தி ராஸ்கர். பரவாயில்லாத வெற்றி. அதையடுத்து ஜுலை 17 அச்சா தின் என்ற படம். படம் தோல்வி. ஆகஸ்ட் 28 -ஆம் தேதி கமல் இயக்கத்தில், உடோபியாவில் ராஜாவு. அதுவும் சுமார்.
 
நான்குப் படங்கள் வெளியான நிலையில் ஐந்தாவது படம், 'பாத மாறி'  இந்த மாதம் 18 -ஆம் தேதி வெளியாகிறது. எந்த மொழி மெகா ஸ்டாரும் இப்படி படங்களாக கழித்து தள்ளுவதில்லை. 
 
இதென்ன ஃபிலிம் டயரியாவா?

லீலா பேலஸில் நடந்த லீலா வினோதம்
 
திரைத்துறையும், பார்ட்டியும் பிரிக்க முடியாதவை. படம் வெற்றி பெற்றாலும் பார்ட்டி, தோல்வியடைந்தாலும் பார்ட்டி (இதை நடத்துவது எதிர்கோஷ்டி). தனி ஒருவன் தாறுமாறு ஹிட். சென்னை லீலா பேலஸில் போட்டார்கள் பார்ட்டியை.
 

 
இதுவரை குட் பாயாக இருந்த ஜெயம் ரவி, இந்த பார்ட்டி போட்டோக்களில் ஒரே மப்பும் மாந்தாரமுமாக இருக்கிறார். ஜெயம் ரவியா இப்படி என்று அனைவருக்கும் ஆச்சரியம். வராது வந்த வெற்றி. கொண்டாடி தீர்த்துவிட்டார் போலிருக்கிறது.
 
சில தினங்கள் முன்பு, இன்னொரு பார்ட்டியில் விஜய், தன்னிலை மறந்து சந்தோஷத்தில் திளைத்த போட்டோவை வெளியிட்டிருந்தனர். 
 
அரசே சாராயம் விற்கிற நாட்டில் ஒரு ஸ்டார் கொஞ்சம் போதையில் இருந்தால், அதென்ன எட்டாவது அதிசயமா? விடுங்க பாஸ்.

சிவகார்த்திகேயனின் முப்பெரும் ஆசை
 
கவுண்டமணியின் 49 ஓ படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழாவில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். விழாவில் பேசுகையில், கவுண்டமணியை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்த நிகழ்வை விவரித்தார். அப்போது பேசியதில் நிறைய, பொதுவில் பகிர்ந்து கொள்ள முடியாதவையாம். 
 

 
சிவகார்த்திகேயன் கவுண்டமணியை புகழ்ந்ததைப் பார்த்தால், அவரது தலைவர் ரஜினியா கவுண்டரா என்று சந்தேகம் வரும். அந்தளவுக்கு ஜிங் ஜாங். கடைசியில் தனது முப்பெரும் விருப்பத்தையும் தெரிவித்தார். முப்பெரும் என்றதும் மூன்று ஆசைகள் என நினைக்க வேண்டாம். ஒரே ஆசைதான்.
 
கவுண்டமணி, சத்யராஜ் இணைந்து கலக்குற படத்தில் அவர்களுடன் சேர்ந்து நடிக்க சிவகார்த்திகேயனுக்கு ஆசையாம். 
 
அதுக்கென்ன. நீங்க நடிக்கிற படத்தில் இரண்டு பேருக்கும் கதாபாத்திரம் தந்துவிட்டால் விருப்பம் தீர்ந்தது.
 
பொண்ணுதர மாட்டேங்கிறாங்க - புலம்பிய பிரேம்ஜி
---------------------------------------------------
பார்ட்டின்னு சொன்னாலே டாணென்று ஆஜராகி விடுகிறவர், பிரேம்ஜி அமரன். பார்ட்டி பாய் என்பதுதான் அவரது அடைமொழி. இப்படி பார்ட்டியா போய்கிட்டிருக்கீங்களே என்று கேட்டால், சந்தோஷமா இருக்கிறதுதான் என்னோட வாழ்க்கை லட்சியம், பிரஸ்மீட் முடிஞ்சதும் பார்ட்டிக்குதான் போறேன் என்றார், மாங்கா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில். அவருக்கு ஒரேயொரு குறை.
 
பிரேம்ஜியை பார்ட்டி பாய் என்று பத்திக்கைகள் பிரபலப்படுத்தியதால் யாரும் பொண்ணுதர மாட்டேங்கிறார்களாம்.
 
வாழ்க்கை ஒரு நாணயம் பாஸ். ஒரு பக்கம் சந்தோஷம்னா மறுபக்கம் சோகம்தான்.

பொண்ணுதர மாட்டேங்கிறாங்க - புலம்பிய பிரேம்ஜி
 
பார்ட்டின்னு சொன்னாலே டாணென்று ஆஜராகி விடுகிறவர், பிரேம்ஜி அமரன். பார்ட்டி பாய் என்பதுதான் அவரது அடைமொழி. இப்படி பார்ட்டியா போய்கிட்டிருக்கீங்களே என்று கேட்டால், சந்தோஷமா இருக்கிறதுதான் என்னோட வாழ்க்கை லட்சியம், பிரஸ்மீட் முடிஞ்சதும் பார்ட்டிக்குதான் போறேன் என்றார், மாங்கா படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில். அவருக்கு ஒரேயொரு குறை.
 

 
பிரேம்ஜியை பார்ட்டி பாய் என்று பத்திக்கைகள் பிரபலப்படுத்தியதால் யாரும் பொண்ணுதர மாட்டேங்கிறார்களாம்.
 
வாழ்க்கை ஒரு நாணயம் பாஸ். ஒரு பக்கம் சந்தோஷம்னா மறுபக்கம் சோகம்தான்.