1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Madras High Court Dismisses Tamannaah Bhatia's Plea for Rs 1 Crore Damages from Power Soaps

1 கோடி ரூபாய் இழப்பீடு கோரிய தமன்னாவின் மனு தள்ளுபடி.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

தமன்னா பாட்டியா
பிரபல நடிகை தமன்னா பாட்டியா, 'பவர் சோப்' நிறுவனத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. 2008-ம் ஆண்டு ஏற்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக 1 கோடி ரூபாய் இழப்பீடு கோரி தமன்னா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
 
இந்த சர்ச்சையின் பின்னணி என்னவென்றால், 2008-ம் ஆண்டு தமன்னா பவர் சோப் நிறுவனத்தின் விளம்பர தூதராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த ஒப்பந்தம் 2009 அக்டோபர் வரை மட்டுமே நடைமுறையில் இருந்தது. ஆனால், ஒப்பந்த காலம் முடிந்த பிறகும், 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் தனது புகைப்படங்களை அந்நிறுவனம் சோப் உறைகளில் பயன்படுத்தி லாபம் ஈட்டியதாக தமன்னா குற்றம் சாட்டினார். இதனால் தனக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் வழக்கு தொடர்ந்தார்.
 
ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்திருந்தார். அதனை எதிர்த்து தமன்னா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து, தமன்னாவின் கோரிக்கையை நிராகரித்தனர். 
 
திரையுலகில் தற்போது சித்தார்த் மல்ஹோத்ராவுடன் 'Vvan' படத்தில் நடித்து வரும் தமன்னாவிற்கு, இந்த சட்ட போராட்டத்தில் ஏற்பட்டுள்ள தோல்வி பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
மாசம் 1.5 கோடி வட்டி.. வாழ்க்கை செட்டில்! நயன்தாரா கணவர் போடும் 350 கோடி மாஸ்டர் பிளான்