வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Updated : செவ்வாய், 19 ஜனவரி 2016 (12:38 IST)

காதல், கல்யாணம், மணமகன்... மனசை திறந்த அனுஷ்கா

இதற்குமேல் காட்ட எதுவுமில்லை எனும் அளவுக்கு தனது மனசை திறந்து காட்டியிருக்கிறார் நடிகை அனுஷ்கா. அப்படி என்ன சொன்னார்?


 

 
"காதல் என்பது வெறும் கவர்ச்சி. அது ஒரு மாயை. தெளிவில்லாத வயதில் ஏற்படுகிறது. இளம் வயதில் எல்லோரையும் அந்த மாயை பிடித்து ஆட்டுகிறது.
 
வளர்ந்த பிறகு காதல் பெயரால் செய்த வேலைகளை நினைத்து பார்த்தால் சிரிப்புதான் வரும். எனக்கு காதல் அனுபவம் இல்லை.
 
காதலிக்க நேரமும் இல்லை. சினிமாவில் ஓய்வில்லாமல் நடித்துக் கொண்டு இருக்கிறேன். சினிமாவை மட்டுமே இப்போது காதலிக்கிறேன்.
 
என்னுடைய திருமணம் நேரம் வரும்போது நடக்கும். எனக்கு கணவராக வருபவருக்கு சில தகுதிகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
 
அவரிடம் ஒளிவு மறைவுகள் இருக்க கூடாது. வெளிப்படையாக பழக வேண்டும். எனக்கு பிடிக்கும் விஷயங்கள், அவருக்கும் பிடிக்க வேண்டும்.
 
அப்படிப்பட்ட ஆண் ஒருவரை சந்திக்கும் போது என் திருமணம் நடக்கும். கடந்த வருடம் நான் நடித்த எல்லா படங்களும் நன்றாக ஓடி எனக்கு பெயர் வாங்கி கொடுத்தன.
 
இந்த வருடத்திலும் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறேன்" என கூறியுள்ளார்.
 
இதற்கு மேல் காதல் குறித்தும், கல்யாணம் குறித்தும் சொல்ல அனுஷ்காவிடம் ஏதாவது இருக்கும் என நினைக்கிறீர்கள்?