கல்யாண் இயக்கத்தில் வளர்ந்து வரும் காத்தாடி ஒரு கடத்தல் கதை என்றார் நடிகர் சம்பத்.
க்ரைம் த்ரில்லராக உருவாகும் காத்தாடியில் சம்பத்தான் முக்கிய கடத்தல்காரர். எப்படி விதவிதமான ஐடியாக்களுடன் கடத்தல் செய்கிறார்கள் என்பதை சுவாரஸியமாக காட்டியிருக்கிறார்கள்.
படத்தில், ஆத்தாடி என்று ஆச்சரியப்படுகிற ஒரு விஷயமும் இருக்கிறது. தன்ஷிகா இதில் போலீஸ் அதிகாரியாக மிடுக்கு காட்டியிருக்கிறாராம். அவரது உயரத்துக்கும் உடற்கட்டுக்கும் விஷாலே காக்கி போட்டு வந்தது போலிருக்கும்.