1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : சனி, 1 ஜூலை 2017 (15:48 IST)

ஜிஎஸ்டியால் கண்ணீர் விட்டு அழும் இவன் தந்திரன் இயக்குநர்

இவன் தந்திரன் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் திங்கள் முதல் திரையரங்குகள் மூடப்படுவதால் படத்தின் இயக்குநர் கண்ணன் கண்ணீர் விட்டு அழும் ஆடியோ வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது. 


 

 
ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை ஆகிய படங்களை இயக்கியவர் கண்ணன். தற்போது இவரது இயக்கத்தில் வெளியாகியுள்ள இவன் தந்திரன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஜிஎஸ்டி வரியால் தமிழகம் முழுவதும் திரையரங்குகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனால் இயக்குனர் கண்ணன் கண்ணீருடன் பேசிய ஆடியோ தற்போது வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது. அதில் அவர், படம் நன்றாக போகிறது. இந்நிலையில் திரையரங்குகளை மூடினால் நான் வாங்கிய கடனுக்கு எங்கு செல்வேன். விக்ரமன் சார், செல்வமணி சார் ஏதாவது செய்யுங்கள் என கூறியுள்ளார்.