நெருக்கமாக நடிக்காததால் நடிகரை திட்டிய ஐஸ்வர்யா ராய்
கரண் ஜோஹரின் இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள படத்தில் இருவரும் மிக நெருக்கமாக நடித்திருப்பது ஐஸ்வர்யா ராயின் புகுந்த வீட்டில் புயலடிக்க வைத்தது. திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான ஐஸ்வர்யா ராய் இப்படி நெருக்கமாக நடிக்கலாமா என்று சாதாரண ரசிகர்களே ஆதங்கப்பட்டனர்.
இந்த நெருக்கம் குறித்து முதல்முறையாக ரன்பீர் கபூர் பேசியுள்ளார்.
ஐஸ்வர்யா ராயுடன் நெருக்கமாக நடிக்க ரன்பீர் முதலில் தயங்கியிருக்கிறார். அதற்கு ஐஸ்வர்யா ராய் அவரை திட்டி, இங்கே பார், ஒழுங்காக நடி, நாம் எல்லாம் நடிகர்கள் என்று ரன்பீருக்கு நெருக்கமாக நடிக்க உற்சாகம் தந்திருக்கிறார்.
அதன் பிறகே ஐஸ்வர்யா ராயுடன் நெருக்கமாக நடித்ததாக ரன்பீர் கபூர் கூறியுள்ளார்.