வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : புதன், 16 நவம்பர் 2016 (17:50 IST)

முகம் சுளிக்காமல் ரசிகர்களுடன் செல்பி எடுத்து கொண்ட அஜித்!

சினிமா திரையிலகில் சினிமா சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாமல் தவிர்த்து வருவ்பவர் நடிகர் அஜித். ஆனாலும் சில நேரங்களில் அவரை வெளியில் சந்திக்கும் ரசிகர்கள் அவர்களுக்குடன் செல்பி எடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவிக்கும்போது மறுப்பு கூறுவதில்லை என ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

 
தற்போது அஜித் நடிப்பில் உருவாகிவரும் ஏகே57 படத்தின் 3ம் கட்ட படப்பிடிப்பிற்காக சமீபத்தில் பல்கேரியா நாட்டுக்கு புறப்பட்டு சென்றது. அப்போது சென்னை விமான நிலையத்துக்கு வந்த அஜித் விமான பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுக்க விருப்பம் தெரிவித்தனர்.
 
ரசிகர்கள் அவர்களிடம் ஆட்டோகிராப் மற்றும் செல்பி எடுத்துக் கொள்ள அனுமதி கேட்டதற்கு அஜித் மறுப்பு ஏதும் சொல்லமல் அனைவரிடமும் செல்பி எடுத்துக்கொண்டார். விமானம் புறப்பட கடைசி அறிவிப்பு வரும் வரை ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.