வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahalakshmi
Last Modified: வெள்ளி, 17 ஜூலை 2015 (13:49 IST)

அனுமதி இல்லாமல் யானை மீது ஏறுவதா? நஸ்ரியா நசீம் மீது புகார்

எந்த நேரத்தில் சனி நம்மீது சவாரி செய்யும் என்று தெரியாது. யானை சவாரி செய்ததால் இப்போது புகாரில் சிக்கியிருக்கிறார்கள் நடிகைகள் நஸ்ரியா நசீமும், ரஞ்சனி ஹரிதாஸும்.
2014 -ஆம் ஆண்டு டிசம்பர் 4 -ஆம் தேதி உயர்நீதிமன்றம் ஒரு ஆணை பிறப்பித்தது. அதன்படி பிராணிகள் நலவாரியத்தின் அனுமதி இன்றி யானை மீது சவாரி செய்வது குற்றமாகும். நஸ்ரியாவும், ரஞ்சனியும் பிராணிகள் நல வாரியத்தின் அனுமதி இல்லாமல் யானை சவாரி செய்தார்கள் என வெங்கடாசலம் என்பவர் திருச்சூர் பிராணிகள் நல வாரியத்திடம் புகார் தந்திருக்கிறார். இவரும் ஒரு விலங்கு ஆர்வலர்தான்.
 
நஸ்ரியாவும், ரஞ்சனியும் சமீபத்தில் கேரள வனத்துறைக்கு சொந்தமான யானை மீது சவாரி செய்தனர். அதுதான் இப்போது பிரச்சனையாகியிருக்கிறது.
 
எல்லாம் சரி. யானை மீது சவாரி செய்ய அனுமதிக்க வேண்டியது யானையா இல்லை பிராணிகள் நலச் சங்கமா?