1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. dhanush decided to do films with jolly mind

இனிமே அப்படி நடிக்கக்கூடாது!.. தனுஷ் எடுத்த முடிவு!.. இயக்குனர்கள் ஷாக்!...

dhanush
நடிகர் தனுஷ் துவக்கம் முதலே பல சீரியஸான கதைகளில் நடித்துள்ளார். இடையில் கமர்சியல் மசாலா படங்களில் நடித்தாலும் உடனே, நடிப்புக்கு தீனி போடும் ஒரு சீரியஸ் படத்தில் நடிப்பதை தனுஷ் வழக்கமாக கொண்டுள்ளார். சீரியஸ் என்றால் படம் முழுவதும் முகத்தை இறுக்கமாகவே வைத்திருப்பார்.

மிகவும் அரிதாகவே அந்த படத்தில் ஏதேனும் ஒரு காட்சியில் அவர் சிறிதாக புன்னகைப்பது போல காட்டுவார்கள். மற்றபடி முகத்தை இறுக்கமாகவே வைத்து பட முழுக்க நடித்திருப்பார். புதுப்பேட்டை, காதல் கொண்டேன், கர்ணன், மரியான், வடசென்னை, அசுரன், கேப்டன் மில்லர், ராயன், கர போன்ற படங்களை சொல்லலாம்.

ஆனால் அப்படி நடித்தால்தான் விருது கிடைக்கிறது என்பதற்காக அவருக்கு நடிக்கிறாரா என்பதும் தெரியவில்லை.. தனுஷின் நடிப்பில் கடைசியாக வெளியான கர படத்திலும் தனுஷ் சீரியஸாகவே நடித்திருந்தார். ஆனால், அந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடிக்கவில்லை.

இந்நிலையில்தான், இனிமேல் முகத்தை இறுக்கமாக வைத்திருக்கும் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டாம்.. தன்னை மிகவும் ஜாலியாக காட்டும் கதைகளில் மட்டுமே நடிக்கலாம் என தனுஷ் முடிவெடுத்துள்ளாராம்.  


About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
11 நாட்களில் ஜனநாயகன் வசூல்... விஜய்யின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதுதான்!