சேரனின் அப்பாவின் மீசை படத்துக்கு தடை
தான் இயக்கிய படத்தையே வெளியிட முடியாத நெருக்கடியில், ரோகிணி இயக்கிய அப்பாவின் மீசை படத்தை சேரன் தயாரித்தார். அவர் அதையாவது செய்தாரே என்று முந்திக்கொட்டையாக யாரும் நற்சான்றிதழ் தர முயல வேண்டாம்.
அப்பாவின் மீசை படத்தில் பணியாற்றிய பலருக்கும் - குறிப்பாக சொற்ப சம்பளம் வாங்கும் உதவி இயக்குனர்களுக்கும் இன்னும் சம்பள பாக்கி வைத்துள்ளார் சேரன். இந்நிலையில் ரவிபிரசாத் ஃபிலிம் லேப்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அப்பாவின் மீசை படத்தை இந்த மாதம் 29 -ஆம் தேதிவரை வெளியிட தடை வாங்கியிருக்கிறது.
அப்பாவின் மீசை படத்தை தயாரிக்க 2012 -இல் 25 லட்சங்கள் இந்த நிறுவனத்திடம் கடன் வாங்கியிருக்கிறார் சேரன். படத்தை வெளியிடும் முன்பு கடனை திருப்புவதாக ஒப்பந்தம். கடனை திருப்பாமல் படத்தை சென்சாருக்கு அனுப்பியதால் வழக்குப் போட்டு தடையும் வாங்கியிருக்கிறார்கள்.