1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. bharathiraja brother intreview about family issue

கங்கை அமரன் கோபப்பட்டதுக்கு இதுதான் காரணம்!.. உண்மையை சொன்ன பாரதிராஜாவின் தம்பி..

bharathi raja
இயக்குனர் இமயம் பாரதிராஜா கடந்த 10ம் தேதி சென்னையில் உள்ள வீட்டில் அதிகாலை 2 மணி அளவில் காலமானார். அவரின் மகன் மனோஜின் மறைவுக்கு பின் மனதளவில் உடைந்து போன பாரதிராஜா அந்த வீட்டில் தனிமையில் வசித்து வந்தார், அவருக்கு உதவி செய்ய ஒரு செவிலியரும், ஒரு உதவியாளரும் இருந்ததாக சொல்லப்படுகிறது.

அவருக்கும் அவரின் மனைவிக்கும் கடந்த பல வருடங்களாகவே சுமூகமான உறவு இல்லாததால் பாரதிராஜாவின் மனைவி தேனியில் உள்ள வீட்டில் வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
தனது கணவர் பாரதிராஜாவின் மறைவு செய்தி கேட்டு அழுது கொண்டே வந்த அவரின் மனைவி உள்ளிட்ட உறவினர்களிடம் அங்கிருந்த பாரதிராஜாவின் நண்பர் கங்கை அமரன் ‘எல்லாரும் அவரை விட்டுட்டு போயிட்டீங்க.. அனாதையா போயிட்டாரு’ என்று கோபப்பட்டார். இது தொடர்பான வீடியோவும் வெளியானது..

இந்நிலையில்தான் இது தொடர்பாக செய்தியாளரிடம் பேசிய பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் ‘கங்கை அமரன் எங்கள் குடும்பத்தில் ஒருவர்.. அண்ணன் மீது அவருக்கு அதிகப்படியான பாசத்தின் காரணமாகவே அப்படி கோபப்பட்டு பேசி விட்டார்.. குடும்ப நிகழ்ச்சி ஒன்றிற்காக தேனி சென்றிருந்த அண்ணி அண்ணன் மறைவு செய்தி கேட்டு உடனே சென்னைக்கு வந்து விட்டார். இதுதான் உண்மை’ எனக் கூறியிருக்கிறார்.
அடுத்த கட்டுரையில்
தெரு நாயும் மக்களும் ஒன்னா?!.. சர்ச்சையான ராகவா லாரன்ஸ் பேச்சு!...