1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ashok
Last Modified: செவ்வாய், 19 ஜனவரி 2016 (20:50 IST)

சிம்பு, அனிருத் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

பீப் பாடல் விவகாரத்தில் நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கம் படி கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 
 
கொங்குநாடு அருந்ததியர் முன்னேற்றப் பேரவை பொதுச் செயலாளர் இளங்கோவன், பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் பாடலை பாடியதாக நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது கோவை 2வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜ்குமார், சிம்பு, அனிருத் ஆகிய இருவரும் வரும் மார்ச் மாதம் 21 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் படி உத்தரவிட்டுள்ளார். இவர்களுக்கு நீதிமன்றம் சார்பாக சம்மன் தற்போது அனுப்பப் பட்டுள்ளது.