ஜெய்ஹிந்த் 2 படம் வெற்றி - குடும்பத்துடன் திருப்பதி வந்த அர்ஜுன்
சமீபத்தில் வெளியான ஜெய்ஹிந்த் 2 படம் வெற்றி பெற்றதால் திருப்பதிக்கு குடும்பத்துடன் வந்து சாமி கும்பிட்டார் அர்ஜுன்.
ஜெய்ஹிந்த் 2 வெளிவருவதற்கு முன்பும் அர்ஜுன் திருப்பதி வந்தார். படம் வெற்றிபெற அவர் அப்போது வேண்டிக் கொண்டார். படம் வெளியாகி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மீண்டும் திருப்பதி வந்தார்.
வேண்டுதல் நிறைவேறியதால் அவர் குடும்பத்துடன் அலிபிரி மலைப்பாதை வழியாக நடந்தே கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டார்.
ஜெய்ஹிந்த் 2 தமிழகத்தில் சுமாராகவேப் போனது. இப்போதெல்லாம் எடுத்த படத்தை வெளியிடுவதே பெரிய வெற்றியாகதான் பார்க்கப்படுகிறது.