சிரஞ்சீவி & கார்த்திக்கு வில்லனாகும் அனுராக் காஷ்யப்!
தெலுங்கு சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த போது அரசியலுக்கு சென்றார். ஆனால் அவரால் பெரியளவில் அரசியலில் சாதிக்கமுடியவில்லை. இந்நிலையில் திரும்பவும் சினிமாவுக்கு வந்து நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் அவர் நடிப்பவை பெரும்பாலும் ரீமேக் படங்களாகவே அமைந்துள்ளன.
இப்போது அவர் சில படங்களில் நடித்துவரும் நிலையில் அந்த படங்கள் எதுவும் இதுவரை அவருக்கு பழைய சூப்பர் ஹிட் படங்கள் போல அமையவில்லை. மீண்டும் எப்படியாவது ஒரு ஹிட் கொடுத்துவிட பல இளம் இயக்குனர்களோடு இணைந்து பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அவர் அடுத்து நடிக்கவுள்ள ஒரு படத்தில் நடிகர் கார்த்தி ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படம் அடுத்தாண்டு தொடங்கி 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை பாபி இயக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார்.