1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By John
Last Updated : செவ்வாய், 1 ஏப்ரல் 2014 (18:38 IST)

ஷங்கர் இயக்கத்தில் அஜீத், ஜோ‌டி ஐஸ்வர்யா ராய்

கௌதம் வாசுதேவ மேனன் படத்துக்குப் பிறகு அஜீத் ஷங்கர் இயக்கும் படத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோ‌டியாக நடிப்பது ஐஸ்வர்யா ராய்.
அஜீத்தை கே.வி.ஆனந்த் இயக்குகிறார், சிறுத்தை சிவா இயக்குகிறார், விஷ்ணுவர்தன் இயக்குகிறார் என யூகச் செய்திகளாகவே வந்து கொண்டிருந்தன. இந்நிலையில் ஷங்கர் அஜீத்தை சந்தித்து ஒரு கதை கூறியிருக்கிறார். கதை கேட்ட அஜீத்தும் உடனே நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். ஐஸ்வர்யா ராயும் இந்த புதுப்படத்தில் நடிக்கிறார் என ஷங்கரின் அலுவலக வட்டாரம் கூறுகிறது.
 
இன்னும் பேச்சுவார்த்தையில் இருக்கும் இந்தப் படத்தில் அஜீத், ஐஸ்வர்யா ராய் இருவருக்குமே இரண்டு வேடங்கள், ஐஸ்வர்யா ராய்க்கு அதில் ஒன்று வில்லி வேடம் எனவும் கூறப்படுகிறது.
 
ஷங்கர் படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்வரை எதுவும் உறுதியில்லை.