நடிகை ஜோதிகாவின் மகளிர் மட்டும் படத்தில் பாடும் சூர்யா!
நீண்ட இடைவெளிக்கு பிரகு 36 வயதினேலே படத்தின் மூலம் சினிமாவிற்கு திரும்பிய நடிகை ஜோதிகா. தற்போது, பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா மகளிர் மட்டும் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு கிப்ரான் இசையமைத்து வருகிறார். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் ஜோதிகா நடித்து வருகிறார். அதன்படி தற்போது ‘மகளிர் மட்டும்’ என்ற படத்தில் ஜோதிகா நடித்து வருகிறார். இப்படத்தில் நாசர், லிவிங்ஸ்டன், சரண்யா, பானுப்ரியா, ஊர்வசி ஆகியோர் பலரும் நடித்துள்ளனர்.
பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், தற்போது டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. மாயாவி படத்திற்கு பிறகு மகளிர் மட்டும் படத்தில் ஜோதிகா சொந்தக் குரலில் பேசியுள்ளார். மேலும் இந்த படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றை நடிகர் சூர்யா பாடியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.