1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. actor suriya is still angry with sr prabu on karuppu

கருப்பு புரட்யூசர் மீது செமயான கோபத்தில் சூர்யா!.. பின்னணி இதுதான்!..

karuppu
ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த மாதம் 15ம் தேதி வெளியான திரைப்படம் கருப்பு. இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருந்தார். இந்த படத்தை சூர்யாவின் நெருங்கிய உறவினர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார்.

இந்த படம் மே 14ம் தேதி ரிலீஸ் என அறிவித்தார்கள். ஆனால் அன்று படம் வெளியாகவில்லை. அதற்கு காரணம் கருப்பு படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு ஏற்கனவே வாங்கிய கடன்களை திருப்பி கொடுக்காததால் சம்பந்தப்பட்டவர்கள் படத்தின் ரிலீஸை தடுத்து விட்டார்கள்.

அதில் கோபமடைந்த சூர்யா ‘ரிலீஸ் வரைக்கும் இவ்வளவு கடன் இருக்கிறது என என்னிடம் ஏன் சொல்லவில்லை? இந்த படம் ரிலீசானாலும். ரிலீசாகவில்லையென்றாலும் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை.. கிடப்பில் போடுங்கள்’ என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாராம்.

அதன்பின் திருப்பூர் சுப்ரமணியம்தான் சூர்யாவிடம் பேசி அவரை சம்மதிக்க வைத்து இந்த படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார். படம் வெளியாகி 340 கொடுகள் வசூலித்து ஒரு மெகா ஹிட் படமாக அமைந்தும் கூட இதுவரை சூர்யா இந்த படத்தின் தயாரிப்பாளரிடம் பேசவில்லை என்கிறார்கள். அதனால்தான், படத்தின் வெற்றியையும் படக்குழு கொண்டாடவில்லை என்கிறார்கள்.
About Writer
பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரையில்
தயாரிப்பாளராக மாறும் ஹெச்.வினோத்: பிக்பாஸ் ராஜுவுடன் இணையும் மெகா கூட்டணி!