1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. actor santhanu bhagyaraj thanks to cm vijay

அண்ணா!. நீங்கள் செய்ததை நன்றியுடன் நினைத்துக்கொள்வேன்!.. சாந்தனு உருக்கம்..

shanthnu
இயக்குனர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜ் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அவரின் மகன் சாந்தனு சினிமாவில் பல வருடங்கள் போராடியும் அவருக்கு ஒரு இடம் கிடைக்கவில்லை. அவரால் ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுக்க முடியவில்லை. இந்த வருத்தம் பாக்யராஜுக்கும் இருந்தது.

இந்நிலையில்தான், அவர் சமீபத்தில் இறந்துபோனார். முதல்வர் விஜய்க்கும், சாந்தனுவுக்கும் பழக்கம் இருப்பதால் விஜய் நேரில் வந்து பாக்யராஜுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும், பாக்யராஜுக்கு அரசு மரியாதை அளிக்கவும் உத்தரவிட்டார். எனவே, 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க பாக்யராஜின் உடல் சென்னை பெசண்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், முதல்வர் விஜய்க்கு தனது எக்ஸ் தளத்தில் நன்றி தெரிவித்துள்ள சாந்தணு ‘உங்களுக்கான என் நன்றியை 26 அல்லது 247-க்குள் எப்படி அடக்கிவிட முடியும்? மெய்யாகவே என் உயிர் வரை நீடிக்கும் நன்றியிது. என் திருமணத்திற்கு தாலி எடுத்து தந்து என் மகிழ்ச்சித் திருநாளைத் துவக்கி வைத்தீர்கள். அதற்கே நானின்னும் நன்றி சொல்லித் தீரவில்லை.

அதற்குள் என் வாழ்வின் துரதிருஷ்ட துக்க தினமான என் தந்தையின் மறைவிற்கு ஆறுதல் சொல்ல வந்த நீங்கள், பதவி சார்ந்த அந்தஸ்தை ஒதுக்கிவிட்டு,  மண்டியிட்டு அம்மாவிடம் ஆறுதல் சொன்னதில் நான் நெகிழ்ந்து விட்டேன். அரசு மரியாதை! மரணத்திலும் மரியாதை!.. ஒரு கலைஞனுக்கான இமாலய பாக்கியம். பெயருக்கு ஏற்ற கம்பீரமான மரியாதையை என் தந்தைக்கு நீங்கள் தந்ததை  என் இறுதிக்குள்ளும் நன்றியோடு நினைத்துக் கொள்வேன். இப்போதைக்கு வேறென்ன சொல்ல? இதயம் கூப்பிய நன்றி அண்ணா!’ என பதிவிட்டிருக்கிறார்..

அடுத்த கட்டுரையில்
நிர்வாகிகளுக்கு டோஸ் விட்ட சூர்யா!.. உடனே வெளியான அறிக்கை!...