1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ilavarasan
Last Modified: ஞாயிறு, 17 ஆகஸ்ட் 2014 (13:55 IST)

ஆயிரத்தில் இருவராக மாறிய செந்தட்டிக்காளை செவத்தகாளை

சரண் நீண்ட இடைவெளிக்குப் பின் ஆயிரத்தில் இருவர் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். வினய் இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் படம் இது.


 
 
இதனை சொல்லும் போது இயல்பாகவே ஒரு கேள்வி வரும். சரண் இயக்கத்தில் வினய் இரு வேடங்களில் நடிக்க செந்தட்டிக்காளை செவத்தகாளை என்ற பெயரில் ஒரு படம் ஆரம்பிக்கப்பட்டதே?
 
அந்தப் படம்தான் இப்போது ஆயிரத்தில் இருவராக பெயர் மாறியுள்ளது. காளை படத்தை ஆரம்பித்து அதிக நாள் ஆனதால் ப்ரெஷ்ஷாக தெரிவதற்காக படத்தின் பெயரை மாற்றியுள்ளனர்.
 
படத்தில் வினய்க்கு மூன்று நாயகிகள். சரண் எப்போதும் அறிமுக நடிகைகளை விரும்புகிறவர். இதிலும் அப்படியே. ஒருவர் ஆந்திராவைச் சேர்ந்த கேஷா கம்பட்டி. இன்னொருவர் டேராடூனைச் சேர்ந்த சாமுத்ரிகா. மூன்றாவது கேரளாவைச் சேர்ந்த ஸ்வஸ்திகா.
 
பரத்வாஜ் இசையமைத்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன.