வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By Dinesh
Last Updated : ஞாயிறு, 14 ஆகஸ்ட் 2016 (10:46 IST)

’எனக்கு இன்னொரு அம்மா கிடைத்திருக்காங்க’ - தொகுப்பாளினி பிரியங்காவின் பேட்டி

’எனக்கு இன்னொரு அம்மா கிடைத்திருக்காங்க’ - தொகுப்பாளினி பிரியங்காவின் பேட்டி

தொகுப்பாளினி பிரியங்காவின் பேட்டி.


 


”விஜய் டிவியில் நான் கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ரசித்து என்சாய் பண்ணி பங்கேற்று வருகிறேன். நிகழ்ச்சியின் போது, நான் சக ஆங்கர்களை கலாய்ப்பேன் பதிலுக்கு அவர்களும் என்னை கலாய்ப்பார்கள். அதனால் ஒர்க் பண்ற பீலே இல்லாமல் ஜாலியாக இருக்கும். தற்போது, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு கேப் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் அடுத்தபடியாக கலக்கப்போவதுயாரு, கிங்ஸ் ஆப் டான்ஸ் போன்ற நிகழ்ச்சிகளில் ஆங்கராக இருக்கிறேன். இதில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் டீம் லீடராக இருக்கிறேன். நிகழ்ச்சியை நானும் ஒரு ஆடியன்ஸ் கண்ணோட்டத்தில் இருந்து ரசித்து வருகிறேன். 

அந்த நிகழ்ச்சியில் எப்போது கலந்து கொள்வோம் என்று ஆர்வமாக காத்திருப்பேன். அச்சம் தவிர் நிகழ்ச்சியில் முதலில் ஆர்வமாகத்தான் சென்றேன். ஆனால் அங்கு சென்றபிறகுதான் அதில் உள்ள ரிஸ்க் தெரிந்தது. ஆனபோதும் பல எபிசோடுகளில் சிறப்பாக செயல்பட்டேன். மேலும், என்னை எனது பெற்றோர் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற போது எப்படி உற்சாகப்படுத்தி வந்தார்களே, அதேபோல் கடந்த 6 மாதமாக எனது புகுந்து வீட்டிலும் என்னை உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.

குறிப்பாக, எனது மாமியார் நான் படப்பிடிப்புக்கு சென்று வந்து வீட்டில் சோர்வாக தூங்கிக்கொண்டிருந்தால் என்னை தொந்தரவு செய்வதே இல்லை. ஓய்வெடுக்கட்டும் என்று விட்டு விடுவார். ஒரு மகளைப்போல என்னை கவனித்துக்கொள்கிறார். அந்த வகையில், எனக்கு புகுந்த வீட்டிலும் மாமியார் என்ற பெயரில் ஒரு அம்மா கிடைத்திருக்கிறார் என்பதில் பெரிய மகிழ்ச்சி.

சினிமாவைப்பொறுத்தவரை நான் நடிகர் தனுஷின் பெரிய ரசிகை. எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதை உணர்ந்து முழுமையான நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய அற்புதமான நடிகர். அவருடன் ஒரு தங்கை வேடத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்தாலும் நடிப்பேன். கலைப்பயணத்தில் இன்னும் நான் செல்ல வேண்டிய தூரம் எவ்வளவோ இருக்கிறது. அதனால் அவருடன் நடிப்பதற்கான வாய்ப்புகள் எதிர் காலத்தில் அமையும் என்று நம்புகிறேன். மேலும், விஜய் டிவியில் ஆங்கராக எனது பயணம் என்றென்றும் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.”