வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By bala
Last Modified: வியாழன், 10 மார்ச் 2016 (12:28 IST)

மகளிர் தினத்தன்று பெண்களிடம் மன்னிப்பு கேட்ட கோலி

சர்வதேச மகளிர் தினத்தன்று பெண்களிடம் மன்னிப்பு கேட்டு கோலி வெளியிட்ட வாழ்த்து செய்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


 

மகளிர் தினமான நேற்று முந்தினம் கிரிக்கெட் வீரர் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து செய்தி வெளியிட்டார். அதில் பெண்களிடம் மன்னிப்பு கோரினார். அதாவது பெண்களை   பின்தொடர்ந்து தொல்லை கொடுப்பவர்கள், விசில் அடிப்பவர்கள், முட்டாள்களுக்காக மன்னிப்பு கேட்டுகொள்கிறேன் என்று தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனக்கு கிடைத்த புகழ், பலம் அனைத்திற்கும் தனது தாயே காரணம் என்று கூறியுள்ளார்.