இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் தேசப்பற்றை பாராட்டி, முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முனாஃப் படேல் முக்கியமான கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடுவதையே இவர்கள் முதன்மையான இலக்காக கொண்டுள்ளனர். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்காக இவர்கள் தங்களை முழுமையாக தயார்படுத்தி வருகின்றனர். ...