தொடர்புடைய செய்திகள்
- நான் மட்டும் இப்போது ஐபிஎல் தலைவராக இருந்திருந்தால் லக்னோ அணியை தடை செய்திருப்பேன்: லலித் மோடி
- தோல்வி மட்டுமல்ல, மோசமான சாதனையை பதிவு செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்.. டெல்லி அபார வெற்றி..!
- ஐபிஎல் இனி வேண்டாம்.. பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் விளையாடும் முன்னணி வீரர்..!
- வைபவ் சூர்யவன்ஷி சின்னப்பையன்.. அதற்குள் எதற்கு இந்திய அணியில்? அஸ்வின் ரவிச்சந்திரன்
- முதல் போட்டியில் படுதோல்வி அடைந்த சிஎஸ்கே.. ருத்ர தாண்டவம் ஆடிய வைபவ் சூரியவன்ஷி..!
SRH ஜெயித்தாலும் அபிஷேக் சர்மாவுக்கு அபராதம்.. கடும் எச்சரிக்கை விடுத்த பிசிசிஐ..!
ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஆல்ரவுண்டர் அபிஷேக் சர்மாவுக்கு பிசிசிஐ கடும் அபராதம் விதித்துள்ளது.
இந்த ஆட்டத்தில் 21 பந்துகளில் 48 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட அபிஷேக், களத்தில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.3-ன் கீழ், ஆபாசமான அல்லது அவதூறான மொழியை பயன்படுத்தியதை அவர் ஒப்புக்கொண்டார். இதற்காக அவரது போட்டி ஊதியத்தில் 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு தகுதியிழப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் ஐதராபாத் அணி 226 ரன்கள் குவித்து, கேகேஆர் அணியை 161 ரன்களில் சுருட்டி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் நடப்பு சீசனில் சன்ரைசர்ஸ் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை கவர்ந்தாலும், களத்தில் ஒழுக்கத்தை மீறியதற்காக அபிஷேக் சர்மா இந்த தண்டனைக்கு உள்ளாகியுள்ளார்.
Edited by Siva
