1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Punjab Kings' Captain Shreyas Iyer Opens Up After Fifth Consecutive Defeat in IPL 2026

தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வி.. பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் கூறும் காரணம் என்ன தெரியுமா?

பஞ்சாப் கிங்ஸ்
ஐபிஎல் 2026 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மும்பை இந்தியன்ஸ்  அணிக்கு எதிரான சமீபத்திய தோல்விக்குப் பிறகு, பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். தோல்விக்குச் சாக்குப்போக்குகளைத் தேட விரும்பவில்லை என்று அவர் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
 
"தோல்விக்காகச் சூழ்நிலையைக் காரணம் காட்ட நாங்கள் விரும்பவில்லை. களத்தில் திலக் வர்மா மிகவும் நேர்த்தியாகச் செயல்பட்டு அற்புதமாக விளையாடினார், அதுவே ஆட்டத்தின் போக்கை மாற்றியது" என ஸ்ரேயஸ் ஐயர் எதிரணி வீரரின் திறமையைப் பாராட்டியுள்ளார். தொடர் தோல்விகள் அணியின் மன உறுதியைப் பாதித்தாலும், அடுத்த போட்டிகளில் மீண்டெழும் முனைப்பில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
பஞ்சாப் அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் எஞ்சியுள்ள நிலையில், அந்த இரண்டிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடி உள்ளது. "அடுத்த போட்டிகளில் விளையாட உற்சாகமாக இருக்கிறோம். எஞ்சிய 2 போட்டிகளிலும் நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் இலக்கு" என ஸ்ரேயஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் உள்ள குறைகளைக் களைந்து, கடைசி நேரத்தில் ஒரு வலுவான கம்பேக் கொடுக்குமா பஞ்சாப் கிங்ஸ் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
 
Edited by Siva
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
கேப்டன் ஆனார் திலக் வர்மா.. முத்தரப்பு தொடருக்கு இந்திய அணி அறிவிப்பு..