வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Dinesh
Last Modified: வியாழன், 28 ஜூலை 2016 (12:40 IST)

இந்தியா-மேற்கிந்திய தீவுகள் 20 ஓவர் கிரிக்கெட்: அமெரிக்காவில் நடத்த திட்டம்

இந்தியா-மேற்கிந்திய தீவுகள் 20 ஓவர் கிரிக்கெட்: அமெரிக்காவில் நடத்த திட்டம்

இந்தியா- மேற்கிந்திய தீவுகள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை அமெரிக்காவில்  நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


 


கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் அந்நாட்டில் விளையாடி வருகிறது. ஆகஸ்ட் 22-ந்தேதியுடன் இந்த தொடர் முடிவடைகிறது. பிறகு இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையே அமெரிக்காவில் 20 ஓவர் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்காக 2012-ம் ஆண்டில் இருந்து போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் புளோரிடாவில் ஆலோசனை நடத்துகிறார்கள். ஆகஸ்ட் மாதம் கடைசியில் 20 ஓவர் போட்டி நடைபெற வாய்புள்ளது.