வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 13 ஜூலை 2017 (21:08 IST)

துவங்கியது புகைச்சல்; கங்குலி- ரவி சாஸ்திரி வாக்குவாதம்: பணையமாகிய ஜாகீர்கான்!!

இந்திய அணி பந்து வீச்சு பயிற்சியாளராக ஜாகீர்கான் நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பாக கங்குலிக்கும், ரவி சாஸ்திரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 


 
 
இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு தகுதியானவர் சேவக்தான் என கங்குலி கூறினார். ஆனால், ஆனால் கோலி விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து ரவி சாஸ்திரியை நியமிக்கபட்டுள்ளார் என கூறப்படுகிறது.
 
அதேநேரம், கங்குலி, கோலி விருப்பத்திற்கு அணியை அமைக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். என்வே, அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக ஜாகீர் கானையும், பேட்டிங் ஆலோசகராக டிராவிட்டையும் நியமித்தார்.
 
இந்த முடிவை குறித்து கங்குலிக்கும் ரவி சாஸ்திரிக்கும் இடயே கடும் வாக்குவாதம் நடந்தாக செய்திகள் வெளியாகியுள்ளன.