வியாழன், 28 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Suresh
Last Modified: சனி, 5 ஜூலை 2014 (10:46 IST)

காலிறுதிப் போட்டியில் கொலம்பியாவை வீழ்த்தி பிரேசில் வெற்றி

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில் 2-1 கோல்கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.

பிரேசிலில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் காலிறுதி ஆட்டங்கள் தொடங்கின. இதில் 2 ஆவது காலிறுதி போட்டியில் பிரேசில் - கொலம்பியா அணிகள் மோதின.

ஆட்டம் தொடங்கிய 7ஆவது நிமிடத்தில் பிரேசில் வீரர் சில்வா முதல் கோலை அடித்தார். இதனால் முதல் பாதிவரை பிரேசில் 1-0 கோல்கணக்கில் முன்னிலை வகித்தது.

2 ஆம் பாதியில் பந்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த கொலம்பியா வீரர்கள் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளைத் தவறவிட்டனர். ஆட்டத்தின் 69 ஆவது நிமிடத்தில் பிரேசில் வீரர் டேவிட் லூயில் தனது அணியின் 2 ஆவது கோலை அடித்தார்.

ஆட்டநேர இறுதிவரை போராடி கொலம்பியா அணியால் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. ஆட்ட நேர முடிவில் பிரேசில் 2-1 கோல்கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.