ராகுல்காந்தியை சந்தித்த சச்சின்.. பிரதமர் மோடியை சந்தித்த ஜடேஜா! இருவருக்கும் என்ன காரணங்கள்?
இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள் நாட்டின் மிகமுக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தனது மகன் அர்ஜுன் டெண்டுல்கரின் திருமணத்தை முன்னிட்டு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கினார். இந்த சந்திப்பின் போது சச்சின் குடும்பத்தினரும் உடனிருந்தனர்.
மற்றொரு நிகழ்வாக, இந்திய நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, தனது மனைவி மற்றும் எம்.எல்.ஏ-வான ரிவாபா ஜடேஜாவுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்புகள் ஒரே நாளில் நிகழ்ந்துள்ளதால் சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளன.
Edited by Siva