ஒலிம்பிக்போட்டி இந்திய தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்
ஒலிம்பிக்போட்டி இந்திய தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம்
இந்திய அணி நல்லெண்ண தூதுவராக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரேசில், ரியோ நகரில், ஆகஸ்ட் மாதம் 5 ம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை 31ஆவது ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது.
இந்த போட்டியில், இந்தியா உள்ளிட்ட உலகில் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிலையில், இந்திய அணியை ஊக்குவிக்கும் வகையில், நல்லெண்ண தூதுவராக இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானுக்கு விளையாட்டுத்துறையை சார்ந்தவர்களும், திரைப்படத்துறையை சார்ந்தவர்களும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.