உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நடுவர் பணியாற்றி வரும் இலங்கை நடுவர் அசோக டிசில்வாவின் நடுவர் பொறுப்பிற்கான திறமைகள் மீது கேப்டன்களுக்கு கடும் சந்தேகங்கள் எழுந்துள்ளது. அயர்லாந்து கேப்டன் போர்ட்டர்ஃபீல்ட் தற்போது டிசில்வாவின் தீர்ப்பின் மீது விமர்சனம் வைத்து எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளார்.