தஞ்சை மாவட்டம் திருவையாற்றில் காவிரி நதியின் கரையில் உள்ள ஒரு சமாதி- கோயிலில் ஒவ்வொரு ஆண்டு ஜனவரி மாதத்தில் வரும் புஷ்ய பகுல பஞ்சமி திதியன்று இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, உலகத்தின் அனைத்து மூலைகளில் இருந்தும் கர்நாடக இசை மேதைகள் திரண்டு ஒரே நேரத்தில் பஞ்ச ரத்ன கீர்த்தனைகளை பாடுகின்றனர்.