சென்னை நகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன், செல்பேசி குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) மூலம் பொதுமக்கள் புகார்களை அனுப்பும் பிரமாண்ட திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த திட்டம் பொதுமக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. எஸ்.எம்.எஸ். மூலம் வரும் புகார்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.