1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. அருளுரை
Written By Sasikala

சத்குரு வாசுதேவ் அவர்களின் ஆன்மீக சிந்தனைகள்

சத்குரு வாசுதேவ் அவர்களின் ஆன்மீக சிந்தனைகள்

ஆன்மிகம் என்பது விழிப்புணர்வுடன் கூடிய அறிவாற்றலுடன் வாழ்வதே! உடலையோ, மனதையோ, ஆற்றல் மிக்க சக்திகளையோ அமைதியாக வைத்திருக்கத் தெரியாத வரை உலக அமைதி என்பது வெறும் கேலிப் பேச்சாகவே இருக்கும்.


 
 
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றால் நமக்கு நாமே ஆபத்தையும், அழிவையும் தேடிக் கொண்டு வாழ்கிறோம். உண்மையில், சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஆன்மிகத்தில் ஈடுபட்டால் மட்டுமே உலகமே உய்வடையும்.
 
அடிப்படையில் வாழ்க்கை ஆனந்தமயமானது. நீங்கள் ஆனந்தத்துடன் தொடர்பு கொள்வீர்களானால் உங்களைச் சார்ந்த அனைத்துமே ஆனந்தமயமாகி விடும்.