1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: புதன், 7 மே 2014 (11:42 IST)

ராணிப்பேட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டில் சந்தேகப்படும்படியான எழுத்துக்கள்

வேலூர் ராணிப்பேட்டை பெல் நிறுவனம் அருகே கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டில் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் எழுத்துக்கள் உள்ளன.
 
வேலூர் ராணிப்பேட்டை பெல் நிறுவன ஊரக குடியிருப்புப் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் செல்போனுடன் இணைக்கப்பட்ட வெடிகுண்டு ஒன்று செவ்வாய்க்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சென்னையில் இருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பாக அது செயல் இழக்கச்  செய்யப்பட்டது.
 
இதையடுத்து, வெடிமருந்து பாட்டிலில் உள்ள ஒரு ஸ்டிக்கரில் எழுதப்பட்டிருந்தவை சந்கேத வார்த்தைகளா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
பாட்டிலில் உள்ள ஸ்டிக்கரில் ஆங்கிலத்தில் இ.எம்.ஐ.எல்.ஐ.ஏ. என்ற எழுத்துக்களும் அதன் அடியில் சில எண்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த எழுத்துக்களின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.