வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Modified: வியாழன், 15 மே 2014 (09:57 IST)

சென்னையில் வாக்கு எண்ணும் 3 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் வாக்கு எண்ணும் 3 மையங்கள் உள்பட 5 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்படும் என நேற்று நள்ளிரவு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி அழைப்பில் பேசிய மர்ம நபர் கூறியுள்ளார்.
 
உடனடியாக காவல் துறையினர் உஷார் படுத்தப்பட்டு நள்ளிரவில் வாக்கு என்னும் மையங்களில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கட்டுப்பட்டு அறைக்கு வந்த மர்ம அழைப்பால் நள்ளிரவில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையில் 3 தொகுதிகளுக்கு பதிவான வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அண்ணா பல்கலைகழகம், லயோலா கல்லூரி மற்றும் ராணிமேரி கல்லூரியில் இரவு, பகலாக காவல்துறையினர் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
 
இருப்பினும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.