வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 20 ஜூலை 2016 (15:35 IST)

சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்த இளைஞர் கைது

நாமக்கல் மாவட்டத்தில் 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி பாலியல் தொந்தரவு செய்த இளைஞர் மற்றும் அவரது சகோதரி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


 
 
நாமக்கல், பவித்ரத்தை சேர்ந்தவர் ஆனந்த். பெயிண்ட வேலை செய்து வரும் இவர் பழையபாளையம் பகுதியை சேர்ந்த ஒரு 16 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.
 
அந்த சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி பாலியல் தொந்தரவு செய்துவந்துள்ளார். இது குறித்து சிறுமியின் தந்தை முருகேசன் காவல்துறையில் புகார் அளித்தார்.
 
இந்த புகாரின் அடிப்படையில் சேத்தமங்கலம் போலீசார் சிறுமியை, ஆனந்தின் சகோதரி வீட்டில் இருந்து மீட்டுள்ளனர். பின்னர் ஆனந்தன் மற்றும் அவரது சகோதரியையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.