1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Modified: வெள்ளி, 2 செப்டம்பர் 2016 (15:39 IST)

சட்டப்பேரவையில் தீக்குளிக்க முயற்சித்த பெண் காவல்துறை ஆய்வாளர்

சட்டப்பேரவை வளாகத்தில் பெண் காவல்துறை ஆய்வாளர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சட்டப்பேரவை வளாகத்தில் திருவொற்றியூர் காவல்துறை ஆய்வாளர் காஞ்சனா தற்கொலைக்கு முயன்றுள்ளார். காவலர் சீருடையில் இருந்த அவர் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
 
இதனைக்கண்ட மற்ற காவல்துறையினர் அவரை தடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பாரத் பந்த்யை முன்னிட்டு பலத்த பாதுக்காப்புடன் சட்டசபை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
 
அந்த வேளையில் பெண் காவல்துறை ஆய்வாளரின் தற்கொலை முயற்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் காவல்துறையினர் காஞ்சனாவின் தற்கொலை முயற்சி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.