வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 6 மே 2021 (20:35 IST)

சென்னையில் தண்ணீர் பஞ்சம் வருமா? அதிகாரிகள் தகவல்

கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னையில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. சென்னையில் குடிநீர் பஞ்சம் வராது என அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகரில் நாளொன்றுக்கு சுமார் 85 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகின்ற நிலையில் குடிநீர்வாரியம் சார்பில் 83 கோடி லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு சென்னையில் குடிநீர் பஞ்சம் வராது என அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.

செம்பரம்பாக்கம், பூண்டி,புழல் சோழவரம் போன்ற ஏரிகளில் இருந்துதான் சென்னைமாநகருக்குக் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.  முக்கியமாக வீரரணத்திலிருந்து குழாய் மூலம் சென்னைக்கு நீர் வருகிறது.

சென்னை மாநகரில் நாளொன்றுக்கு சுமார் 85 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகின்ற நிலையில் குடிநீர்வாரியம் சார்பில் 83 கோடி லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது அத்துடன் ஆந்திராவில் இருந்து கிருஷ்ணா நதி நீரும் இம்மாதக் கடைசியில் வரவுள்ளது என இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு சென்னையில் வராது என அதிகாரிகள் தீர்கமாகத் தெரிவித்துள்ளனர்.