வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வியாழன், 7 ஜூலை 2016 (09:10 IST)

வாட்ஸ்ஆப் பார்க்காதே; கண்டித்ததால் மனைவி மாயம்

வாட்ஸ்ஆப் பார்க்காதே, செல்போன் பேசாதே என கணவர் கண்டித்ததால் மனைவி மாயமாகியுள்ள சம்பவம் திருச்சி பாலக்கரை அருகே நடந்துள்ளது.


 
 
அயூப் அலி, ரம்ஜான்கனி தம்பதியதற்கு 2 குழந்தைகள் உள்ளன. ரம்ஜான்கனி செல்போன் பேசுவதையும், வாட்ஸ்ஆப் உபயோகிப்பதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.
 
இந்நிலையில் வாட்ஸ்ஆப் உபயோகித்ததால் அயூப் அலி அவரது மனைவி ரம்ஜான்கனியை கண்டித்ததுடன், அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரம்ஜான்கனி சண்டையிட்டு தன் பெற்றோர் வீட்டுக்கு செல்ல ரயில் நிலையத்துக்கு வந்துள்ளார்.
 
ரயில் நிலையத்துக்கு அவருடன் அயூப் அலியும் வந்துள்ளார். அங்கும் இருவருக்கும் இடையே சண்டை வர ரம்ஜான்கனி காவல் நிலையத்துக்கு சென்று புகார் கொடுக்க செல்வதாக கூறி மாயமாகி உள்ளார்.
 
இதனையடுத்து அயூப் அலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.