வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : செவ்வாய், 22 அக்டோபர் 2019 (21:37 IST)

மரணத்தின் வலி எப்படி இருக்கும் ? தூக்கில் தொங்கிய இளைஞர் : நெஞ்சை உலுக்கும் ’டைரி பதிவு ’

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலைக்குச் சென்றுவந்த இளைஞர் ஒருவர், தூக்கிட்டு தற்கொலை செய்து  கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை முகப்பேறு பகுதியில் உள்ள 4 வது பிளாக் பகுதியில் வசித்து வந்தவர் முரளிதரன். இவர் , பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்று வந்தார்.
 
இந்நிலையில், தனது டைரியில் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். 
 
அதில், என் வறுமையை போக்கிக் கொள்ள முடியாமலும் , எதிர்க்கால வாழ்கை வாழ போதுமான கல்வி இல்லாததாலும்  நான் தற்கொலை செய்து கொள்கிறேன்’ மரணத்தின் வலியையும் நான் ஏற்றுக்கொள்கிறேன் ‘என்று அவர் அந்தக் கடிதத்தில் எழுதி உள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.