1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Modified: வெள்ளி, 8 ஜனவரி 2016 (00:22 IST)

தடைகளைத் தாண்டி ஜல்லிக்கட்டு நடத்துவோம்: வேல்முருகன் ஆவேசம்

தமிழகத்தில், தடைகளைத் தாண்டி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என்று தி.வேல்முருகன் ஆவேசம் காட்டியுள்ளார்.
 

 
இது குறித்து, திண்டுக்கல்லில், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் தி.வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
தமிழகத்தில் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்க முன்பு இருந்தே ஜல்லிக்கட்டு விளையாட்டு உள்ளது. இது தமிழர்கள் கலாச்சாரம் மற்றும் சமூகத்துடன் கூடிய விளையாட்டு ஆகும்.
 
இதற்கு மத்திய அரசு உடனே அனுமதி பெற்று தர வேண்டும். இல்லை எனில் தமிழக வாழ்வுரிமை கட்சி எத்தனை தடைகள் வந்தாலும் அதனை தாண்டி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியே தீரும்.
 
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியது போல், மாநில அரசு அவசர சட்டம் பிறப்பித்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம். எனவே, இனி இந்த விஷயத்தில், மாநில அரசு மத்திய அரசை சார்ந்து இருக்க தேவையில்லை என்றார்.