செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Ashok
Last Modified: செவ்வாய், 15 டிசம்பர் 2015 (17:09 IST)

வாகன பழுது நீக்கும் முகாம்களில் பணம் வசூல் செய்வதாக விஜயகாந்த் புகார்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்களுக்கு இலவச பழுது நீக்கும் முகாம்களில் பணம் வசூல் செய்யப்படுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். 


 
 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களுக்கு இலவசமாக பழுது நீக்கும் முகாம் நடத்தப்படுமென தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஆனால் அந்த முகாம்களில் பல்வேறு காரணங்களை கூறி பணம் வசூல் செய்வதாகவும், வாகனங்களை பத்து நாட்களுக்குப் பிறகே திரும்ப பெறமுடியுமென கூறுகின்றனர்
 
எனவே இதுபோன்ற செயல்களை தடுத்து தமிழக மக்கள் மீது முதலமைச்சர் ஜெயலலிதா அக்கறை செலுத்தவேண்டும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.