வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 14 மே 2016 (16:00 IST)

உளுந்தூர்பேட்டையில் கோபமடைந்த விஜயகாந்த்: அடிச்சு தூக்குடா அந்த ஆளை

தமிழக சட்டசபை தேர்தலில் தேமுதிக-மக்கள் நல கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடுகிறார். தான் போட்டியிடும் தொகுதியில் பிரச்சாரம் செய்த விஜயகாந்த் தொண்டர் ஒருவரிடம் கோபப்பட்டார்.


 
 
விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் வெற்றி பெறுவது சந்தேகம்தான், தோல்வியடைவார், இழுபறி, மூன்றாம் இடத்துக்கு தள்ளப்படுவார் என ஊடகங்களில் கருத்துக்கணிப்புகள் வெளிவருகின்றன. இந்நிலையில் அதே தொகுதியில் அவர் கோபப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஊடகங்களில் வெளியாகும் கருத்துக்கணிப்புகளை அடுத்து விஜயகாந்த் தான் போட்டியிடும் தொகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். இந்நிலையில் விஜயகாந்த் தீவிர பிரச்சாரம் செய்து கொண்டிருந்தபோது தொண்டர் ஒருவர் கூச்சலிட்டது விஜயகாந்தை கோபப்படுத்தியது.

 

நன்றி: புதிய தலைமுறை
 
விஜயகாந்த் கோபப்பட்ட அப்புறம் என்ன அதிரடி தான். தொண்டர் கூச்சலிட்டதும், விஜயகாந்த் கையை நீட்டி அமைதியாக இருக்குமாறு கூறினார். ஆனால் அந்த தொண்டர் தொடர்ந்து கூச்சலிட கடுப்பகி போன விஜயகாந்த் அடிச்சு தூக்குடா அந்த ஆளை என்று கூறினார். எத்தனை தடவைதான் சொல்றது... கம்முன்னு இருக்கணும் என்னா? என்று கூறினார்.