1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Verification of Voter List in Tamil Nadu: Notices Issued to 13 Lakh Voters

ஆவணங்களை கொண்டு வந்து உறுதி செய்யுங்கள்: சுமார் 13 லட்சம் வாக்காளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்..!

தமிழகத் தேர்தல்
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்காளர் பட்டியலை சுத்திகரிக்கும் பணியில் இந்திய தேர்தல் ஆணையம் தீவிரமாக இறங்கியுள்ளது. ஏற்கனவே வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், சுமார் 97 லட்சம் போலி மற்றும் இரட்டை பதிவுகள் நீக்கப்பட்ட நிலையில், தற்போது பட்டியலில் உள்ள 12.43 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை உறுதிப்படுத்த கூடுதல் ஆவணங்கள் கோரப்பட்டுள்ளன.
 
சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகப்படியான வாக்காளர்களுக்கு இந்த நோட்டீஸ்கள் அனுப்பப்படுகின்றன. ஒவ்வொரு நோட்டீஸிலும் தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட்டுள்ளதுடன், அதன் விநியோகம் BLO செயலி மூலம் நேரடியாக கண்காணிக்கப்படுகிறது. நோட்டீஸ் பெறும் வாக்காளர்கள் பிறப்பு சான்றிதழ், பாஸ்போர்ட் அல்லது இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட 13 வகை ஆவணங்களில் ஒன்றை கொண்டு தங்களது பதிவை உறுதி செய்ய வேண்டும்.
 
இந்த சரிபார்ப்புப் பணிகள் வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பெயர் சேர்க்க விரும்புவோர் ஜனவரி 18-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியலை எவ்வித பிழையுமின்றி தயாரிப்பதே தேர்தல் ஆணையத்தின் முதன்மை நோக்கமாகும்.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
காங்கிரஸ் கட்சி வர வாய்ப்பே இல்லை.. விஜய் காத்திருப்பது வீண்: அரசியல் விமர்சகர்கள்..!