வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Bala
Last Modified: வெள்ளி, 6 நவம்பர் 2015 (11:39 IST)

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருக்கையில் அமர்ந்த நிலையில் வாலிபர் உயிரிழப்பு

திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் நேற்று சுமார் 22 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கையில் பையுடன் வந்தார். அவர் அருகிலிருந்த கடையில் தண்ணீர் வாங்கி குடித்து விட்டு பயணிகளுக்கான இருக்கையில் வந்து அமர்ந்தார். பின்னர் சிறிது நேரத்தில் இருக்கையில் சாய்ந்தவாறு இருந்தார். நீண்ட நேரமாகியும் எவ்வித அசைவுகளையும் காணாத பயணிகள், அவரை எழுப்பியபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை கிழக்கு போலீசார் விரைந்து வந்தனர். அவரது பையை சோதனை செய்தனர். ஆனாலும் அவர் குறித்த எந்த விபரமும் தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.