1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. udhyanidhi stalin says tvk govt doing scam

பயிர்க்கடன் தள்ளுபடி ஒரு பெரிய ஸ்கேம்!.. இன்னும் எவ்ளோ ஏமாத்துவீங்க?.. உதயநிதி காட்டம்!...

udhyanidhi
தேர்தல் பிரச்சாரத்தின் போது தவெக வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றுதான் விவசாய கடன் தள்ளுபடி. 5 ஏக்கருக்கு கீழ் வைத்திருப்பவர்களுக்கு அவர்கள் வாங்கிய மொத்த கடனும் தள்ளுபடி எனவும் 5 ஏக்கருக்கு மேல் வைத்திருக்கும் விவசாயிகள் வாங்கிய கடனில் 50 சதவீதம் கடன் தள்ளுபடி என கூறப்பட்டிருந்தது.

ஆனால் நேற்று வெளியான தமிழக அரசின் பயிர் கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பில் 50 ஆயிரம் வரையிலான கடன் மட்டுமே முழு தள்ளுபடி என கூறப்பட்டிருந்தது. மேலும் சிறு விவசாயிகளுக்கு 25 ஆயிரம் வரை கடன் தள்ளுபடி என அறிவிக்கப்பட்டிருந்தது. இது விவசாயிகளுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது. இதற்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். விவசாய சங்கங்கள் போராட்டத்தை முன்னெடுப்பதாக அறிவித்திருக்கின்றன

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் ‘பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது த.வெ.க அரசு. தேர்தல் பிரச்சாரத்தின் போது,5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி தந்தார்கள்.

ஆனால், இப்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று சொல்லி இருக்கிறார்கள். இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. மாபெரும் நம்பிக்கை மோசடி.ஏற்கனவே, 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்று சொல்லிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என்று அதிர்ச்சி தந்தார்கள்.

இப்போது, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், SCAM செய்கிறார்கள். இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா CM saar?’ என அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.