1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. "Touch Public Money and Face Jail!" – CM Vijay Explodes Against Corruption in Assembly

மக்கள் பணத்தை தொட்டவர்களை விடமாட்டோம்: சட்டமன்றத்தில் ஊழல்வாதிகளுக்கு முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை!

vijay
தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, முதலமைச்சர் விஜய் அவர்கள் எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளுக்கும் அவதூறுகளுக்கும் ஆவேசமாகப் பதிலடி கொடுத்தார்.
 
அரசுத் துறைகளில் நடக்கும் முறைகேடுகள் குறித்து பேசிய முதலமைச்சர், "மறுபடியும் சொல்றேன், இப்பவும் சொல்றேன்... பொதுமக்களோட பணத்துல இருந்து ஒரு பைசா கூட நாங்க தொட மாட்டோம், யாரையும் தொடவும் விடமாட்டோம்! இதுக்கு முன்னாடி தொட்டவங்களையும் விடமாட்டோம்’ என்று மிகக் காரசாரமாக எச்சரித்தார்.
 
மேலும், தவெக அரசு மற்றவர்களின் தயவால் நடப்பதாகக் கூறப்படும் வதந்திகளைப் போட்டுடைத்த அவர், தமிழ்நாட்டு மக்களின் பேராதரவாலும், மனசாட்சி உள்ள நல்ல சக்திகளின் சப்போர்ட்டாலும் மட்டுமே இந்த ஆட்சி கம்பீரமாக நடப்பதாகக் கூறினார். கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக-வுக்கு ஆதரவளிப்பது அவர்களின் சுயமாக எடுத்த முடிவு என்று விளக்கிய முதலமைச்சர், "நாங்கதான் அனுப்பி வச்சோம்" என்று திமுக நாடகமாடுவதைச் சாடினார்.
 
 "நாங்கள் அமைச்சரவையில் இடம் கொடுத்தால் உங்களுக்கு ஏன் இவ்வளவு கதறல்?" என்று அவர் எழுப்பிய அடுக்கடுக்கான கேள்விகளால், திமுக உறுப்பினர்கள் பதிலே பேச முடியாமல் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
பார்ட்டி ஃபண்ட்.. முதல்வர் விஜய் கூறிய ஒரே ஒரு வார்த்தை.. ஒட்டுமொத்த திமுக எம்.எல்.ஏக்கள் அதிர்ச்சி..