தொடர்புடைய செய்திகள்
- கல்வி கட்டணம் என்ன கருப்பு பணமா? தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் நீதிபதி கேள்வி..!
- திமுக ஆட்சியில் வைக்கப்பட்ட குடிநீர் ஏடிஎம் இயந்திரங்கள் மாயம்.. பதில் சொல்லுங்க கே.என்.நேரு... அறப்போர் இயக்கம்..
- தமிழ்நாட்டை விட்டு வெளியேறும் முன்னர் ஆர்.என். ரவி போட்ட தரமான உத்தரவு.. பரபரப்பு தகவல்..!
- மீண்டும் தொடங்கப்படும் ஆகாஷ் பாஸ்கரன் வழக்கு? சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு..
- கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு!.. தவெக அரசு அதிரடி!.. திமுக அதிர்ச்சி!...
அண்ணா பல்கலையை அடுத்து ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்திலும் போலி பேராசிரியர்களா? திமுக அரசு தூங்கியதா?
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சுயநிதித் தனியார் கல்லூரிகளில் பணியாற்றும் அனைத்து பேராசிரியர்களின் முழுமையான விவரங்களையும் தங்களின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
கல்வித்துறையில் வெளிப்படைத்தன்மையை கொண்டுவரும் நோக்கில், 'அறப்போர் இயக்கம்' தொடர்ச்சியாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மேற்கொண்ட தீவிர முயற்சியின் காரணமாக இந்த முக்கிய உத்தரவு கிடைத்துள்ளது.
முன்னதாக, அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் ஒரே பேராசிரியர் பல கல்லூரிகளில் பணியாற்றுவதாக காட்டி அரங்கேற்றப்பட்ட போலிப் பேராசிரியர்கள் ஊழல் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. அதே போன்றதொரு பிரம்மாண்ட போலி பேராசிரியர் முறைகேடு, ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பி.எட் மற்றும் எம்.எட் கல்லூரிகளிலும் நடந்திருக்கலாம் என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.
இதன் காரணமாகவே, இந்த விவரங்களை இணையதளத்தில் வெளியிட பல்கலைக்கழக நிர்வாகம் இவ்வளவு காலமாக தயங்கி வந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. தற்போது தகவல் ஆணையத்தின் இந்த அதிரடி உத்தரவு, ஆசிரியர் தகுதி மற்றும் கல்வித்தரத்தில் நிலவி வரும் முறைகேடுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் என்று சமூக ஆர்வலர்கள் பெரிதும் நம்புகின்றனர்.
Edited by Siva
