சிறப்பு பயிற்சி பெற, லண்டன் செல்லும் தமிழக போலீஸ் டி.ஐ.ஜி.க்கள்
சிறப்பு பயிற்சி பெற தமிழக போலீஸ் டி.ஐ.ஜி.க்கள் 5 பேர் லண்டன் செல்ல உள்ளனர்.
சிறப்பு பயிற்சி பெற தமிழக போலீஸ் டி.ஐ.ஜி.க்கள் 5 பேர் லண்டன் செல்கின்றனர். இந்த பயிற்காக,
சென்னை உளவுப் பிரிவு இணை ஆணையர் வரதராஜூ,
திருச்சி சரக டி.ஐ.ஜி.செந்தாமரைக்கண்ணன்,
தஞ்சை சரக டி.ஐ.ஜி.சஞ்சய் குமார்,
காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி.சத்தியமூர்த்தி,
கிழக்கு மண்டல இணை ஆணையர் ஸ்ரீதர் ஆகியோர் லண்டன் செல்கின்றனர்.
இதற்கு முன்னதாக, செப்டம்பர் 1ஆம் தேதி முதல், ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தேசிய போலீஸ் அகாடமியில் ஒரு மாதம் பயிற்சி பெறுகின்றனர். இந்த பயிற்சியை நிறைவு செய்த பின்பே, லண்டன் செல்கின்றனர் என்பது குறிப்பிடடதக்கது.